தன்னை அடையாளம் கண்டு தன்னை தன் முரண்களோடு நேசிக்கும் உறவு மனதில் தன் இராட்சச வேர்களைப் பரப்பும்போதும்
உறவில் ஓர் அந்தரங்கத் தனிமை நோக்கி நகரும் போதும்
உறவாக அன்பில் வாழ இயலாது பதறும்போதும்
உறவில் காதலையே உணராத போதும்
உறவில் அடுத்த நிலை நோக்கி நகர திராணி இல்லாத போதும்
பேரன்பை பெருஞ்சுமையாய் உணரும்போதும்
பிரிவின் துயர் நினைத்து அஞ்சும்போதும்
ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் தேவையாயிருக்கிறது.
இங்கு ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் என்பது
ஒருவரை விட்டு விலகிச்செல்லுதல்
ஒருவரை வாழவிடுதல்.