C.ருத்ரய்யா - சிறந்த திரைப்பட இயக்குநர் என தனது ஒரே படத்தின் மூலம் உணர்த்தியவர். வாழ்நாளில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர். காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு சினிமா உலகை விட்டு விலகி, வெறுத்து, பின் முயன்று, தோற்று, நோய்வாய்பட்டு, இயற்கை எய்திய கலைஞன். அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு.செழியன் அவர்களின் எழுத்தில் விகடனில் படிக்க நேர்ந்தது. அதன் தாக்கத்தில் பார்த்த திரைப்படம் "அவள் அப்படித்தான்". 1970 களில் சமூகத்தில் பெண் என்பவள் எப்படிப்பட்டவள் என்று ஒரு பிம்பம் இருந்தது. பெண் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதிகளை ஊசியில் உள்ளடக்கி பெண்ணே உணராமல் ஒவ்வொரு பெண்ணின் இரத்தத்திலும் செலுத்தியிருந்தது சமூகம். இன்றளவும் தமிழ் சினிமா பேசத் தயங்குகிற, பூடகமாகவே மட்டும் சொல்ல முயன்ற, ஆழ்ந்த உள்ளடக்கம் கொண்ட ஒரு கருவை 1978ல் கையிலெடுத்து பொளேரென போட்டு உடைத்தார் ருத்ரய்யா. பெண் பற்றிய சமூகத்தின் கட்டமைப்பை செதில் செதிலாக பெயர்த்து வேறு பரிமாணத்தை வெளிச்சமிட்டு காட்டியது இந்தப் படம். சினிமா என்பது காட்சி மொழி என்று சொன்னவர் அவர். ஒவ்வொரு காட்சியிலும் சிந்தனை தெறிப்புகள். சிறந்த சொல்லாடல். வழக்கம்போல மக்களுக்கு பிடிக்கவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பின் கிராமத்து அத்தியாயம்(இன்னும் பார்க்கவில்லை). அதன் பின் 35 வருட இடைவெளி. அடுத்தது மரணம். கடைசியாக ஒளிப்பதிவாளர் செழியனுடனான உரையாடலின் போது அவர் சொன்ன வார்த்தைகள் சுருக்கமாக.
" ஏன் செழியன் நான் இப்போ படம் எடுத்தா மக்கள் பார்ப்பாங்களா? 2 கதை இருக்கு. ஒரு சின்ன பட்ஜெட் படம். ஒரு பெரிய பட்ஜெட் சயின்டிஃபிக் படம். கமல்கிட்டயும் கேட்டிருக்கேன். யாராவது ப்ரொடியூசர் இருந்தா சொல்லுங்க செழியன். கெடச்சா பாக்கலாம் இல்லனா சோத்த தின்னே சாகவேண்டியதுதான்".
சாரம்: ஆனந்த விகடன்
" ஏன் செழியன் நான் இப்போ படம் எடுத்தா மக்கள் பார்ப்பாங்களா? 2 கதை இருக்கு. ஒரு சின்ன பட்ஜெட் படம். ஒரு பெரிய பட்ஜெட் சயின்டிஃபிக் படம். கமல்கிட்டயும் கேட்டிருக்கேன். யாராவது ப்ரொடியூசர் இருந்தா சொல்லுங்க செழியன். கெடச்சா பாக்கலாம் இல்லனா சோத்த தின்னே சாகவேண்டியதுதான்".
சாரம்: ஆனந்த விகடன்
No comments:
Post a Comment