அவளுடைய பழம்புதுமைப் பெயரில் தொடங்கியது எனக்கும் அவளுக்குமான ஊடல்.
இந்தத் தலைமுறைக்கு ஏற்றாற்போல் தன் பெயரைச் சுருக்கி வைத்துக்கொண்டு
அப்படித்தான் விளிக்க வேண்டுமென அடம்பிடிக்கும் வளர்ந்த குழந்தை அவள்!
தேவதை அவள்!
காலத்தின் மேற்பார்வையில்
எண்ணற்ற உரையாடல்களால் நெய்யப்பட்டு எங்களுக்குள் இழையோடிய அன்பின் கொடியை அறுக்க விரும்பாமல் முன்னுணர்வோடு
பெயரில்லா உறவென்று பெயர் வைத்துக்கொண்டோம்.
சொற்களால் உண்டான உறவில்...
ஒரு புள்ளியில், ஒருவர் அறியாமல் ஒருவர் தன் மனக்கூட்டுக்குள்ளேயே சேர்த்து வைத்த அன்பின் சொற்கள் நிறைந்து, வழிந்து, அயர்ந்து, இதற்கு மேல் உங்களுக்கு உதவ முடியாது என்று சிதறி ஓடின. அதன்பின்
சொற்களற்ற அமைதி-
அமைதியின் ஆர்ப்பரிப்பு.
அமைதியின் விளைவாக
அவளது திருமணம்-ஒரு நீண்ட இடைவெளி-குழந்தை.
இனி அவளுக்குப் பேசுவதில் இடையூறு எதுவும் இல்லை
தயக்கம் இல்லை
வெட்கம் குழைத்த கூச்சம் இல்லை
பாதுகாப்பு அரண் கிடைத்துவிட்டது.
உறக்கமில்லா நீண்ட இரவுகளும்
பேரிருளில் வெளிச்சப்புள்ளிகளாய் கசியும் நினைவுகளுமாய் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்த போது
ஓர் நாள்
தன்னை ஒரு "பெண்" என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
என் முகம் கூட தெளிவாக நினைவிலில்லாது என்னைப் பற்றி முழுதும் அறியாது ஏன் என்றே தெரியாமல் எனக்காக அழுததாகச் சொன்னாள்.
நான் என் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்றாள்.
என்னைப்பற்றி ஒரு நம்பிக்கை ஏற்படாதவாறு கடைசிவரை அவளைக் குழப்பினேன் என்று சொன்னாள்.
அவளை என் ஆய்விற்கு நான் பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னாள்.
' திருமணம் செய்து கொள்வாய் அல்லவா?' என்று கேட்டுவிட்டு
சில நொடிகளுக்குப் பின்
' செய்துகொள்ள வேண்டும்' என பதில் சொன்னாள்.
குற்ற உணர்வு கொள்வதாகச் சொன்னாள்.
நினைவுநாடாக்களில் உயிருடன் உலாவிய மனச்சொற்கள்
அனைத்தையும்
திரும்பவும் ஒரு பெரு மெனக்கெடலுக்குப் பின் மூளைச்சொற்களாக வெளிப்படுத்தினாள்.
கடமைக்காக இன்னும் என்னன்னவோ சொன்னாள்.
அதன்பின்னான உரையாடல்களில் சொற்களின் மீது என் மீதான கழிவிரக்கத்தின் நெடி தீவிரமாக வீசியது. முதல்முறையாக சொற்கள் கசந்தது எனக்கு.
எதற்காக இத்தனை மெனக்கெடல்கள்?
இத்தனை விளக்கங்கள்?
அவள் வாழ்வில்
நிகழ்ந்துவிட்ட அன்பின்பிழை நான்
காலம் நிகழ்த்திய பெருந்தவறு நான்
கோழை நான்
முட்டாள் நான்
என்று சொல்லாமல் சொல்கிறாளா?
எனக்குப் புரியவில்லை.
எங்கோ தட்டிற்று.
ஆனால், ஒன்று மட்டும் மிக உறுதியாகத் தெரிந்தது.
அவள் மனமெனும் பச்சை பசேலென்ற வயல்வெளியில் பிடுங்கி எறியப்பட வேண்டிய களை நான்!
இந்தத் தலைமுறைக்கு ஏற்றாற்போல் தன் பெயரைச் சுருக்கி வைத்துக்கொண்டு
அப்படித்தான் விளிக்க வேண்டுமென அடம்பிடிக்கும் வளர்ந்த குழந்தை அவள்!
தேவதை அவள்!
காலத்தின் மேற்பார்வையில்
எண்ணற்ற உரையாடல்களால் நெய்யப்பட்டு எங்களுக்குள் இழையோடிய அன்பின் கொடியை அறுக்க விரும்பாமல் முன்னுணர்வோடு
பெயரில்லா உறவென்று பெயர் வைத்துக்கொண்டோம்.
சொற்களால் உண்டான உறவில்...
ஒரு புள்ளியில், ஒருவர் அறியாமல் ஒருவர் தன் மனக்கூட்டுக்குள்ளேயே சேர்த்து வைத்த அன்பின் சொற்கள் நிறைந்து, வழிந்து, அயர்ந்து, இதற்கு மேல் உங்களுக்கு உதவ முடியாது என்று சிதறி ஓடின. அதன்பின்
சொற்களற்ற அமைதி-
அமைதியின் ஆர்ப்பரிப்பு.
அமைதியின் விளைவாக
அவளது திருமணம்-ஒரு நீண்ட இடைவெளி-குழந்தை.
இனி அவளுக்குப் பேசுவதில் இடையூறு எதுவும் இல்லை
தயக்கம் இல்லை
வெட்கம் குழைத்த கூச்சம் இல்லை
பாதுகாப்பு அரண் கிடைத்துவிட்டது.
உறக்கமில்லா நீண்ட இரவுகளும்
பேரிருளில் வெளிச்சப்புள்ளிகளாய் கசியும் நினைவுகளுமாய் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்த போது
ஓர் நாள்
தன்னை ஒரு "பெண்" என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
என் முகம் கூட தெளிவாக நினைவிலில்லாது என்னைப் பற்றி முழுதும் அறியாது ஏன் என்றே தெரியாமல் எனக்காக அழுததாகச் சொன்னாள்.
நான் என் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்றாள்.
என்னைப்பற்றி ஒரு நம்பிக்கை ஏற்படாதவாறு கடைசிவரை அவளைக் குழப்பினேன் என்று சொன்னாள்.
அவளை என் ஆய்விற்கு நான் பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னாள்.
' திருமணம் செய்து கொள்வாய் அல்லவா?' என்று கேட்டுவிட்டு
சில நொடிகளுக்குப் பின்
' செய்துகொள்ள வேண்டும்' என பதில் சொன்னாள்.
குற்ற உணர்வு கொள்வதாகச் சொன்னாள்.
நினைவுநாடாக்களில் உயிருடன் உலாவிய மனச்சொற்கள்
அனைத்தையும்
திரும்பவும் ஒரு பெரு மெனக்கெடலுக்குப் பின் மூளைச்சொற்களாக வெளிப்படுத்தினாள்.
கடமைக்காக இன்னும் என்னன்னவோ சொன்னாள்.
அதன்பின்னான உரையாடல்களில் சொற்களின் மீது என் மீதான கழிவிரக்கத்தின் நெடி தீவிரமாக வீசியது. முதல்முறையாக சொற்கள் கசந்தது எனக்கு.
எதற்காக இத்தனை மெனக்கெடல்கள்?
இத்தனை விளக்கங்கள்?
அவள் வாழ்வில்
நிகழ்ந்துவிட்ட அன்பின்பிழை நான்
காலம் நிகழ்த்திய பெருந்தவறு நான்
கோழை நான்
முட்டாள் நான்
என்று சொல்லாமல் சொல்கிறாளா?
எனக்குப் புரியவில்லை.
எங்கோ தட்டிற்று.
ஆனால், ஒன்று மட்டும் மிக உறுதியாகத் தெரிந்தது.
அவள் மனமெனும் பச்சை பசேலென்ற வயல்வெளியில் பிடுங்கி எறியப்பட வேண்டிய களை நான்!
No comments:
Post a Comment