“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே யுள”
கண்ணால் காண்பதை எல்லாம் காதால் கேட்க முடியாது.
காதால் கேட்பதை எல்லாம் கையால் தொட முடியாது.
தொடுவதை எல்லாம் நுகர முடியாது.
நுகர்வதை எல்லாம் உண்ண முடியாது.
ஆனால், கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே!
~~
ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டவனை விட, மையல் கொண்டு திரிபவனை விட, ஒரு பெண்ணை அணு அணுவாய் நேசித்தவனை விட, எந்த அனுபவங்களும் கிடைக்கப்பெறாத ஒருவனால் இன்னும் அதிகமாக காதலின், அன்பின், பிரிவின் உணர்வுகளுக்குள் ஊறித் திளைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
பேசிப்பழகும் போது காதலில் விழுவதற்கான பல தருணங்கள் வாய்த்திருந்தும் சூழலோ, கோழைத்தனமோ, மனநிலையோ, இயலாமையோ, சுயகழிவிரக்கமோ, சொல்ல முடியாத ஏதோ ஒன்றோ தடுத்துவிட்ட அந்தப் பொன்னான தருணங்களை இழந்த யாரும் தங்களை எல்லாக் காதல் கதைகளுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். காதல்வெளியில் இறக்கைகளின்றி பறக்கமுடியும்.
அந்த வகையில், ஒவ்வொரு காட்சியிலும் காதலில் விழுந்துகொண்டே இருந்த ஒரு திரைக்கவிதை '96. விழவே வேண்டாமென்று தள்ளி நின்று ரசித்த அத்தனை உள்ளங்களும் இந்தக் காதலில் விழுந்துவிடும்! இந்தக் காதலைக் கொண்டாடும்!
காதலில் விழுந்து, வாழ்ந்து, திளைத்து, மகிழ்ந்து, சேர முடியாமல் பிரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களுக்கு இத்திரைக்கவிதை கடத்தும் வலி சொல்லில் அடங்காதது!
‘காதலிப்பதால் கிடைப்பதில் பாதிசுகம்…பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது' எனும் வள்ளுவன் கூற்றை அப்படியே கடத்தியிருக்கிறார்கள் திரையில்!
கண்கள்! கண்கள்! கண்கள்! திரைமுழுக்க பார்வைகளின் மாயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கண்கள்தான் எப்பேற்பட்ட உணர்வு கடத்தி! இத்திரைக்கவிதை காதல்பித்தனால் மட்டுமே முடிந்த ஒன்று! மற்றபடி, அவனது நினைவுச் சிதறல்களில் ஏதோ ஒரு நிகழ்வில் எல்லோரும் பயணம் செய்யலாம்!
கலை காட்சிகளின் கையாடல் என்பதற்கு இந்தத் திரைக்கவிதை ஒரு நற்சான்று!
வேறென்ன சொல்ல!
காதலின் ஈரம் உணரச் செய்த கலைஞர்களுக்கு அன்பு முத்தங்கள்!!!
ஒண்தொடி கண்ணே யுள”
கண்ணால் காண்பதை எல்லாம் காதால் கேட்க முடியாது.
காதால் கேட்பதை எல்லாம் கையால் தொட முடியாது.
தொடுவதை எல்லாம் நுகர முடியாது.
நுகர்வதை எல்லாம் உண்ண முடியாது.
ஆனால், கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே!
~~
ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டவனை விட, மையல் கொண்டு திரிபவனை விட, ஒரு பெண்ணை அணு அணுவாய் நேசித்தவனை விட, எந்த அனுபவங்களும் கிடைக்கப்பெறாத ஒருவனால் இன்னும் அதிகமாக காதலின், அன்பின், பிரிவின் உணர்வுகளுக்குள் ஊறித் திளைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
பேசிப்பழகும் போது காதலில் விழுவதற்கான பல தருணங்கள் வாய்த்திருந்தும் சூழலோ, கோழைத்தனமோ, மனநிலையோ, இயலாமையோ, சுயகழிவிரக்கமோ, சொல்ல முடியாத ஏதோ ஒன்றோ தடுத்துவிட்ட அந்தப் பொன்னான தருணங்களை இழந்த யாரும் தங்களை எல்லாக் காதல் கதைகளுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். காதல்வெளியில் இறக்கைகளின்றி பறக்கமுடியும்.
அந்த வகையில், ஒவ்வொரு காட்சியிலும் காதலில் விழுந்துகொண்டே இருந்த ஒரு திரைக்கவிதை '96. விழவே வேண்டாமென்று தள்ளி நின்று ரசித்த அத்தனை உள்ளங்களும் இந்தக் காதலில் விழுந்துவிடும்! இந்தக் காதலைக் கொண்டாடும்!
காதலில் விழுந்து, வாழ்ந்து, திளைத்து, மகிழ்ந்து, சேர முடியாமல் பிரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களுக்கு இத்திரைக்கவிதை கடத்தும் வலி சொல்லில் அடங்காதது!
‘காதலிப்பதால் கிடைப்பதில் பாதிசுகம்…பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது' எனும் வள்ளுவன் கூற்றை அப்படியே கடத்தியிருக்கிறார்கள் திரையில்!
கண்கள்! கண்கள்! கண்கள்! திரைமுழுக்க பார்வைகளின் மாயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கண்கள்தான் எப்பேற்பட்ட உணர்வு கடத்தி! இத்திரைக்கவிதை காதல்பித்தனால் மட்டுமே முடிந்த ஒன்று! மற்றபடி, அவனது நினைவுச் சிதறல்களில் ஏதோ ஒரு நிகழ்வில் எல்லோரும் பயணம் செய்யலாம்!
கலை காட்சிகளின் கையாடல் என்பதற்கு இந்தத் திரைக்கவிதை ஒரு நற்சான்று!
வேறென்ன சொல்ல!
காதலின் ஈரம் உணரச் செய்த கலைஞர்களுக்கு அன்பு முத்தங்கள்!!!