"மனதை இருள்படர்ந்த எண்ணங்கள்
கவ்விக்கொள்ளும் போது
மனச்சிறகுகள் வெகுசுலபமாக திசை
மாறுகின்றன அந்த சில கணங்களுக்கு மட்டும்"
தற்கொலை!
இனி இந்த உலகில் வாழ, தான் தகுதியற்றவன் என்று ஒருவனை நினைக்கச் செய்வது எது?
பயம்,குற்றஉணர்ச்சி,அவமானம், தோல்வி,கோழைத்தனம்,நம்பிக்கையின்மை,மனஉளைச்சல்,வேலையின்மை என ஒரு சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் தற்கொலைக்கான திரி. முரண் யாதெனில், அதே பிரச்சனைகள்தான் மனித வாழ்க்கைக்கு பிடிப்பையும் கொடுக்கிறது! அந்த திரி எண்ணெய் ஊற்றாமலேயே எரிந்து கொண்டிருக்கிறது எல்லோரது மனதிலும். சட்டென ஒரு இருள் படர்ந்து அந்த திரி அணையும் போது உயிர் மீதான ஈர்ப்பு போய்விடுகிறது. வாழ்க்கைப் படகின் துடுப்பாய் இருந்த பிரச்சனைகள் எமனாய் மாறுகின்றன. ஒரு வெறுமை நிலையை, வெற்றிடத்தை மனம் உணரும் அந்த நிமிடங்களே கொலைகார நிமிடங்கள்! கவனமாக கையாள வேண்டிய இராட்சச நிமிடங்கள்!
வலுவான மனநிலைகொண்ட, பல சிக்கல்களை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட, நம்பிக்கை செறித்த,துன்பத்திலேயே உழன்றாலும் தளராத இதயம் கொண்ட, எத்தனை எத்தனை நண்பர்களைக் கூட சாய்த்து விடுகிறது இந்த தற்கொலை. நான் மிரண்டுபோகிறேன் ஒவ்வொரு உயிரும் இந்த தற்கொலைகாரனால் பறிக்கப்படும் போது!
கவ்விக்கொள்ளும் போது
மனச்சிறகுகள் வெகுசுலபமாக திசை
மாறுகின்றன அந்த சில கணங்களுக்கு மட்டும்"
தற்கொலை!
இனி இந்த உலகில் வாழ, தான் தகுதியற்றவன் என்று ஒருவனை நினைக்கச் செய்வது எது?
பயம்,குற்றஉணர்ச்சி,அவமானம், தோல்வி,கோழைத்தனம்,நம்பிக்கையின்மை,மனஉளைச்சல்,வேலையின்மை என ஒரு சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் தற்கொலைக்கான திரி. முரண் யாதெனில், அதே பிரச்சனைகள்தான் மனித வாழ்க்கைக்கு பிடிப்பையும் கொடுக்கிறது! அந்த திரி எண்ணெய் ஊற்றாமலேயே எரிந்து கொண்டிருக்கிறது எல்லோரது மனதிலும். சட்டென ஒரு இருள் படர்ந்து அந்த திரி அணையும் போது உயிர் மீதான ஈர்ப்பு போய்விடுகிறது. வாழ்க்கைப் படகின் துடுப்பாய் இருந்த பிரச்சனைகள் எமனாய் மாறுகின்றன. ஒரு வெறுமை நிலையை, வெற்றிடத்தை மனம் உணரும் அந்த நிமிடங்களே கொலைகார நிமிடங்கள்! கவனமாக கையாள வேண்டிய இராட்சச நிமிடங்கள்!
வலுவான மனநிலைகொண்ட, பல சிக்கல்களை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட, நம்பிக்கை செறித்த,துன்பத்திலேயே உழன்றாலும் தளராத இதயம் கொண்ட, எத்தனை எத்தனை நண்பர்களைக் கூட சாய்த்து விடுகிறது இந்த தற்கொலை. நான் மிரண்டுபோகிறேன் ஒவ்வொரு உயிரும் இந்த தற்கொலைகாரனால் பறிக்கப்படும் போது!
No comments:
Post a Comment